வெளிநாடு சென்று இந்தியா திரும்பியவர்கள் வெளியில் நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

0

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இது வரை தமிழ்நாட்டில் 9 பேர் பாதிப்பட்டுள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் வெளியில் நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. .

ஊரடங்கு போராட்டம்

கொரோனா அச்சத்தால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று சுய ஊரடங்கு மூலம் அடையாள முடக்கம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட 75 மாவட்டங்களில் இந்த ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் மீண்டும் இயல்புக்குத் திரும்பியுள்ளனர்.

இதனை கட்டாயமாக அறிவிப்பது குறித்தும், மாவட்டங்களை தனிமைப்படுத்துவது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தின் முடிவில் கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடு சென்று இந்தியா திரும்பியவர்கள் வெளியில் நடமாட கூடாது. மீறி நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here