தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது. தற்போது பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உயிர்கொல்லி நோயான கொரோனா..!
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசாங்கம் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் கொரோனா..!
புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயதான ஆண் மற்றும், 52 வயதான பெண் இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு ஸ்டான்லி அரசுமருத்துவமனையிலும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |