ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் ‘1 ஆண்டு சிறை’ – அரசு எச்சரிக்கை..!

0
Narayanasamy V
Narayanasamy V

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி போன்ற பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.

ஊரடங்கு உத்தரவு:

புதுவையில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் தவிர அனைத்து விதமான கடைகளும் பூட்டப்பட்டன. மேலும் அங்குள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வருபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தார்.

பிறந்த பெண் குழந்தைக்கு ‘கொரோனா’ என பெயர் சூட்டிய தம்பதி – ‘ஒற்றுமையின் சின்னம்’ ..!

தமிழகத்தில் ‘மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா’ – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை..!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட உள்ளதால் இன்று மதுபானங்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here