உலகமே கொரோனா தொற்றால் அச்சம் அடைந்துள்ளது. இந்த நோயை தடுக்க அந்தந்த நாட்டு அரசு போராடி கொண்டுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்ய உள்ளார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.
கொரோன பாதிப்பு குறைந்தது – முகக்கவசம் அவசியமில்லை ஸ்பெயின் நாட்டு பிரதமர் அறிவிப்பு!!!
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனாவின் ஆட்டம் மக்களுக்கு பெரும் அச்சமாக உள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலையின் ஆட்டம் கோரத்தாண்டவமாக இருக்கிறது. இந்த இரண்டாம் அலை தாக்கம் இளைஞர்களை அதிகம் குறிவைத்து தாக்கின. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய மருத்துவ வசதிகள் இல்லாமலும் அக்ஸிஜென் இல்லாமலும் மருத்துவனையில் படுக்கை வசதிகள் இல்லாமலும் அங்கும் இங்குமாக அலைந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
பின் வெளிநாடுகள் மூலமும் உள்நாட்டு அரசு மூலமாகவும் அக்ஸிஜென் போன்ற மருத்துவ உபகாரணகள் போன்றவை சிகிச்சைக்காக பயன்படுத்த வரவழைக்கப்பட்டது. இந்த நோய்க்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அந்நாட்டு அரசுகள் தற்காலிகமாக நோயை எதிர்த்து போராட தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் பற்றி உரிய அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெறுகிறது.