கொரோனவின் கோரத்தாண்டவத்தால் உலகம் முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்த உலக நாடு அரசு அனைத்தும் தக்க நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வந்தன. இந்நிலையில் இங்கிலாந்து இத்தாலி நாட்டை தொடர்ந்து ஸ்பெயின் நாடு அரசும் மக்கள் அனைவரும் முக கவசம் அணிய தேவையில்லை என அறிவித்துள்ளது.
மக்களை தவிக்க விடும் பெட்ரோல், டீசல் விலை …! – இன்றைய விலை நிலவரம் !!!
முகக்கவசம் அவசியமில்லை…
கொரோனா என்னும் கொடிய நோயால் உலகமே பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இரண்டாம் அலையால் பொருளாதார வீழ்ச்சியும் மற்றும் உயிர் பலிகளின் எண்ணிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகம் தான் ஆகின. இதுவரை உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்ததோரின் எண்ணிக்கை 17.99 கோடி ஆகும். எனவே இந்த நோயை எதிர்த்துப் போராட உலக நாடுகள் அனைத்தும் தன் நாட்டு மக்கள்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பும் தாக்கமும் குறைந்துள்ளது அதனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய அவசியமில்லை என இரு அரசும் அறிவித்தது இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டிலும் கொரோனவின் பாதிப்பும் தொற்றின் தாக்கமும் குறைந்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது பொது இடங்களில் முகக்கவசம் அணிய அவசியமில்லை என இத்தாலி நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கேட்ட ஸ்பெயின் நாட்டு மக்கள் அனைவரும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.