ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்திய கீர்த்தி சுரேஷ் …! – அவரே வெளியிட்ட புகைப்படம் !!!

0

பிற மொழி நடிகைகள் தமிழ் மொழிக்கு வந்து  களம் காண்பது இயல்பே. அந்த வகையில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள். தமிழில் அவரின் நடிப்பில் உருவான பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தன்னுடைய செல்ல நாய் குட்டி தன் மேல் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்குபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடித்து வந்த இவர் ‘கீதா அஞ்சலி’ என்ற மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதே போன்று தமிழில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம் ‘ படத்தின் மூலம் தமிழில் நுழைந்தவர்.

அதன் பின்னர் தமிழில் விஜய் ,சூர்யா , தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான படங்கள்  நல்ல வரவேற்பை பெற்றதை  அடுத்து ஹீரோயின் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க முடிவு செய்தார். ஆனால் இவர் நினைத்தபடி அந்த படங்கள் அவருக்கு கை  கொடுக்கவில்லை.

அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படம் ரசிகர்களை பொறாமைப்பட வைத்து உள்ளது. அதாவது தன்னுடைய நாய் குட்டியை தன் மேல் உட்கார வைத்து ஒரு புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் ஏங்கிப் போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here