இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 90,802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உலகளவில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. மேலும் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள காரணத்தால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. உலகில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதுவரை 42,04,613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் இதுவரை 71,642 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
கடந்த 24 மணிநேரத்தில் 69,564 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 32,50,429 ஆக உயர்ந்துள்ளது. ஐசிஎம்ஆர் தகவலின் படி நாடு முழுவதும் 4,95,51,507 கொரோனா சோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் விகிதம் 1.70% ஆகவும், குணமடைந்தவர்கள் விகிதம் 77.31% ஆகவும் உள்ளது.