2021 கொரோனா ஆண்டு தானா?? இந்தியாவில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!!

0

கடந்த ஆண்டு முழுவதும் தான் கொரோனா காலமாகவே சென்றது. தற்போதைய நிலையை பார்த்தால் இந்த ஆண்டும் கொரோனா ஆண்டாக மாறிவிடுவது போல் தான் தெரிகிறது. காரணம் அந்த அளவிற்கு வேகம் எடுத்து வருகிறது கொரோனாவின் பரவல்.

கொரோனா:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்து இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா. கடந்த ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்த தீவிர நடவடிக்கையால் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனாவின் தாக்கம் சற்று கட்டுக்குள் வந்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் தொடங்க ஆரம்பித்தது. ஆனால் கடந்த சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் மிக அதிகமாக பரவி வருகிறது. இதனால் இந்திய மக்கள் அனைவரும் அச்சமடைந்த வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக சுமார் 40,953 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,15,55,284 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதனால் நாட்டில் கொரோனவால் உயிரிழந்தவர்ர்களின் எண்ணிக்கை 1,59,558 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 23,653 பேர் மீண்டுள்ளனர். இதனால் நாட்டில் மொத்தமாக கொரோனாவில் இருந்து 1,11,07,332 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சுமார் 2,88,394 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா பரவி வருவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here