கடற்கரையில் இப்படி ஒரு போஸா – அனிகாவின் போட்டோஷூட் அட்டகாசம்!!

0

தமிழ் திரையில் உள்ள முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக இருந்து வருபவர் தான், ‘குட்டி நயன்தாரா’ என்று அழைக்கப்படும் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் பல நாட்களுக்கு பிறகு தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அனிகா சுரேந்திரன்

தங்களது சிறு வயது முதலே சில நடிகைகள் சினிமா துறையின் மீது ஆர்வம் கொண்டு, திரைப்படங்களில் நடிப்பர். அப்படி தமிழ் திரையில் அறிமுகமானவர்கள் என்று பார்த்தால் நடிகை ஸ்ரீதேவி, நடிகை ஷாலினி என்று பலரை கூறலாம்.

‘என்ன ஒரு அலட்சியம்’ – தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதித்த ஆட்சியர்!!

அந்த வரிசையில் தற்போது அனைத்து தரப்பு நடிகைகளுக்கும் போட்டியாக இருப்பவர் தான், நடிகை அனிகா சுரேந்திரன். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலமாக திரை துறையில் அறிமுகமாகியுள்ளார்.

இதன் பிறகு தமிழில் 2015 ஆம் ஆண்டு நடிகர் ‘தல’ அஜித்துடன் “என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார். இதன் காரணமாக இவரை ‘தல’ அஜித்தின் ரீல் மகள் என்றே அழைக்கப்பட்டார். அந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் அனிகா இருவருக்கும் இனிதான தந்தை மற்றும் மகள் பாசம் இருந்திருக்கும்.

இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு “விஸ்வாசம்” திரைப்படத்தின் மூலமாக மீண்டும் அவருக்கு மகளாக நடித்திருப்பார். இந்த படத்தினை தொடர்ந்து அனிகா பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டும் அல்லாது இவர் குறும்படங்களில் கூட நடித்துள்ளார். இவர் நடித்த “மா’ குறும்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனிகா இந்த பொது முடக்கத்தின் போது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதனை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார். தற்போது பல நாட்களுக்கு பிறகு கடலில் நிற்கும் தனது புகைப்படங்களை அனிகா வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here