தலைவா கடைசியில சீரியலுக்கு வந்துட்டீங்களா?? ஷாக்கில் பிக் பாஸ் ஆரி ரசிகர்கள்!!

0

பிக்பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா, ராஜா ராணி’ சிறப்பு தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள காட்சிகள் வரும் வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் ஆரி அர்ஜுனன்

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ ‘பிக்பாஸ் சீசன் 4’. கொரோனா பொது முடக்க காலத்திற்கு பிறகு ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற எல்லா நிகழ்ச்சிகளை விட ரேட்டிங்கில் தெறிக்கவிட்டது. மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் இந்நிகழ்ச்சி அதிகமான பார்வையாளர்களை சம்பாதித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக்பாஸ் சீசன் 4ல் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ரியோ, ஆஜீத், ரம்யா பாண்டியன், கேப்ரியல்லா ஆகியோருடன் நடிகர் ஆரி அர்ஜுனன் சோம் சேகர், அர்ச்சனா, சனம் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் அதிகபட்சமாக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற நடிகர் ஆரி அர்ஜுனன் முதல் பரிசை வென்றார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறப்பு தொடர் ஒன்றில் நடிகர் ஆரி அர்ஜுனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி 2’ தொடர்களின் சிறப்பு எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சிறப்பு எபிசோடின் படப்பிடிப்பு மகாபல்லிபுரத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த தொடரின் சிறப்பு விருந்தினராக விஜே அர்ச்சனா கலந்து கொண்டார்.

அர்ச்சனா நடித்துள்ள காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா ராஜா ராணி’ சிறப்பு தொடரில் நடிகர் ஆரி அர்ஜுனன் கலந்து கொள்ள உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் ஆரி இந்த சிறப்பு எபிசோடில் நடித்துள்ளார். ஆரி அர்ஜுனன் நடித்துள்ள சிறப்பு எபிசோடுகள் வரும் வாரங்களில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here