தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 30 லட்ச பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சென்னை ஆணையர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தியுள்ளார். இதனை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை சென்னை மாநகர ஆணையர் இன்று காலை வந்து பார்வையிட்டார். மேலும் இன்று மட்டும் சுமார் 2,000 பேருக்கு தடுப்பூசியை போடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க சனிக்கிழமை தோறும் தடுப்பூசிகளை பெறுவதற்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பு முகம் நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
2021 கொரோனா ஆண்டு தானா?? இந்தியாவில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!!
அதுமட்டுமல்லாமல் வீட்டு வேலை செய்யும் ஊழியர்கள், ஓட்டுனர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு வங்கி ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் மூலம் சென்னையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் விகிதம் மொத்தம் 45 நாட்களில் சுமார் 30லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளனர்.