கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4,209 பலி – இந்தியாவில் தொடரும் சோகம்!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சம் அடைந்து வரும் நிலையில் தற்போது நேற்று ஒரே நாளில் மேலும் 4,209 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு:

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது நாட்டு மக்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,59,591 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,60,31,991 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 4,209 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,91,331 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3,57,295 பேர் குணமடைந்துள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு – அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!!

இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,27,12,735 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் 30,27,925 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 20,61,683 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் இதுவரை மொத்தம் 32,44,17,870 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here