விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா கண்கலங்கியுள்ளார். அதற்கான காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி பவித்ரா
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறது. முதல் சீசனிலிருந்து தற்போது சீசன் வரை அனைத்தும் மக்களின் விருப்பமான ஷோவாக தான் திகழ்கிறது. அதில் முக்கிய பிரபலமே கோமாளிகள் தான். ஷிவாங்கி, புகழ், மணிமேகலை மற்றும் பாலா போன்றோர் 2 வருடங்களாக கலக்கி கொண்டுள்ளனர்.
ஸ்பாட்டில் டக்கென்று வரும் காமெடி தான் அவர்களின் திறமையே. ஒன்றும் தெரியாமல் மணிமேகலை செய்யும் அட்டகாசம். அப்பாவியான ஷுவாங்கி. குக்குகளுக்கு ரூட் விடும் புகழ். என தங்களின் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்துள்ளனர். கவர்ச்சி நடிகையான ஷகிலாவிற்கு இந்த ஷோவிற்கு பிறகு தான் ஷகிலா அம்மா என்று அடையாளமே மாறியது.
அந்த அளவிற்கு குக் வித் கோமாளிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசன் முடிவுக்கு வரவுள்ளது. இந்த வாரம் செலபரேசன் ரவுண்டு நடக்கவுள்ளது. குக் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனர். இவர்களை பார்த்த பவித்ரா தன் அம்மா நியாபகம் வந்து விட்டதாக கண்கலங்கியுள்ளார்.
புகழ், வெங்கட் பட் என அனைவரும் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். ஆனால் ஷகிலா அம்மா அதிரடியாக முடிவெடுத்துள்ளார். பவித்ரா என்னோட இன்னொரு மகள் என்று கூற பவித்ராவுக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது. தற்போது ஷகிலா மக்கள் மனதில் மேலும் நிலைத்துள்ளார். பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.