முடி உதிர்தல் பிரச்சனையா?? கவலையே வேண்டாம், இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

0

அனைவருக்கும் மிகவும் தொல்லையாக விஷயம் என்றால் அது, முடி உதிர்தல் பிரச்சனை தான். இதில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். இது இயற்கை தீர்வு என்பதால் இதனை அனைவரும் பயன்படுத்தலாம்.

முடி உதிர்தல் பிரச்சனை

இன்று பலருக்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை என்றால் அது, முடி உதிர்தல் பிரச்சனை தான். சிலருக்கு முடி முன் நெற்றி, தலை உச்சி என்று சில இடங்களில் வளராமல் இருக்கும். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதனை தீர்ப்பதற்காக பலரும் பார்லர் அல்லது மருத்துவ முறையினை நாடுகின்றனர்.

அன்புடன் குஷி ப்ரஜின் வீட்டில் நடந்த விசேஷம் – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

இது குறிப்பிட்ட காலத்திற்கு பயன் அளித்தாலும், பின்பு பக்கவிளைவுகளை காட்டி விடும். இதன் காரணமாக முன்பை விட அதிகமாகவே முடி கொட்ட ஆரம்பித்து விடும். இதற்கு எளிய தீர்வு ஒன்று உள்ளது. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் என்றால் தேங்காய் எண்ணெய் 100 கிராம், வெந்தயம் 2 டீஸ்பூன் மற்றும் கருஞ்சீரகம் 2 டீஸ்பூன் இந்த பொருட்களே போதும். முதலில், வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் இரண்டையும் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு, அதனை எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயில் இந்த கலவையினை சேர்க்க வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை சூடுபடுத்த வேண்டும். பின், இந்த எண்ணெய் உள்ள பாத்திரத்தினை எடுத்து அதில் வைக்க வேண்டும். அதில் எண்ணெய் வெதுவெதுப்பானதும் அதனை எடுத்து ஒரு கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்னை கூடிய விரைவில் தீர்ந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here