தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1 கப் , தக்காளி, வெங்காயம் – கெட்டியான தேங்காய் பால் – 1 கப் , உப்பு – தேவையான அளவு புதினா – 1/2 கப் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3,
வரமிளகாய் – 2 துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு – 4 பற்கள்,நெய் – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் பிரியாணி இலை – 1 பட்டை – 1/4 இன்ச் கிராம்பு – 2 ஏலக்காய் –
செய்முறை
முதலில் புதினா, கரம் மசாலா, பச்சை மிளகாய், வர மிளகாய், இஞ்சி பூண்டு போன்றவற்றை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து,
இனிமேல் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன்..!
அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும்,பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் வெங்காயம், தக்காளி, போட்டு வதக்கி , பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!