தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,384 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் ஒரு நாளுக்கு 500, 700 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக ஆயிரத்தைக் கடந்து உள்ளது. மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இரண்டு இலக்கமாக பதிவாகி உள்ளது. இது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை உணர்த்துகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
- தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் – 27,256
- இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 220
- குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 14,901
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பொழுது 124 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 2 மாதங்களில் பல மடங்கு உயர்ந்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என்பதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும் குணமடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்ல தகவலாக உள்ளது. இன்று மட்டும் 585 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்கள்:
- சென்னை – 18,693
- செங்கல்பட்டு – 1,537
- திருவள்ளூர் – 1,124
- கடலூர் – 472