சீன விமானங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா – அதிகரிக்கும் மோதல்

0
சீன விமானங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா - அதிகரிக்கும் மோதல்
சீன விமானங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா - அதிகரிக்கும் மோதல்

கொரோனா வைரஸால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டது பொருளாதார வீழ்ச்சி என பலவற்றை இழந்தது இதற்க்கு எல்லாமே காரணம் சீனா தான் என உலக சுகாதார மையத்திடம் கூறியது அதற்கு பதிலடியாக பல தடையை அமெரிக்கா சீனாக்கு எதிராக போட்டது.இப்பொழுது சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நாட்டைச் சேர்ந்த விமானங்களை தங்கள் நாட்டுக்குள் இயக்குவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஜூன் 16ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வர உள்ளது.

சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம்,சீனாவின் வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்தான் வைரஸ் பரவியது என அமெரிக்கா குற்றம் சாட்டியது.இந்த வைரஸை முன்கூட்டியே தடுத்திருக்க முடியும் ஆனால் அது அப்படி செய்ய சீனா அரசு தவறிவிட்டது திட்டமிட்டே அது அப்படி நடந்து கொண்டது எனவும் அமெரிக்கா அடுக்கடுக்காக சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது. இதனால் இரு நாடும் மாறி மாறி தடைகளை விதித்து வருகின்றன.

ஜூன் 16-ஆம் தேதி முதல் சீன விமானங்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் பறக்ககூடாது என அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த தடை சீனாவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவில் இதுவரை 65 லட்சத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 3 லட்சத்து 88 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர், எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,  அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை எட்டியுள்ளது, 1 லட்சத்து 9 ஆயிரம் பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர்,

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சீனா எல்லைமீறிவிட்டது அதனால் அமெரிக்கா தடை விதித்தது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இயக்கக்கூடிய மூன்று விமான நிறுவனங்களும், தங்களது இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. அதனால் அந்த  நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது,  ஆனாலும் இரு நாட்டுக்கும் இடையே விமான இயக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் அதன் அளவு கணிசமாக குறைந்தது, அதிலும் சீன விமானங்கள் மட்டுமே இயங்கி வந்தன.  இந்நிலையில் மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம்  அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது, அதாவது நாட்டில் கொரொனா வைரஸ் மெல்ல கட்டுப்பாட்டுக்குள் வருவதால் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது வாரத்திற்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே சீனாவுக்குள் அனுமதிக்க  முடியும் என அது அறிவித்தது. இதனால் அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ்,  யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரின, ஆனால் சீனா அனுமதி வழங்க மறுத்துவிட்டது,  இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா 1980-ம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியதுடன், 

ஜூன் 16-ஆம் தேதி முதல் சீன நாட்டு விமானங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதேபோல் அமெரிக்காவிலிருந்து சீனா செல்வதற்கு, அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு சீனா தடைவிதித்ததன் எதிரொலியாக ட்ரம்ப் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கனவே தென்சீன கடல் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்துவரும் நிலையில்,  அமெரிக்கா, சீன விமானங்களுக்கு தடை விதித்திருப்பது இரு நாட்டுக்கும் இடையே போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது  என விமர்சிக்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மொத்தமாக துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதே நிலை நீடித்தால் அமெரிக்காவில் இருந்து சீனர்கள் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.  ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இதுவரை சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here