15 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

0

தமிழகத்தில் செப்டம்பர் 25ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அடுத்த 24 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி ஆகிய 15 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய பகுதிகளின் பல இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

நவம்பர் 1 முதல் OTP கூறினால் தான் LPG சிலிண்டர் கிடைக்கும் – எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30 ºC மற்றும் 25 ºC ஆக இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

அக்டோபர் 19 ஆம் தேதி கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அது வலுவடையும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்காள விரிகுடா விரிகுடா மற்றும் ஆந்திர மாநில கடற்கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் 45-55 கி.மீ அளவை எட்டும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here