விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் டாப் ரேஞ்சில் போய்க் கொண்டுள்ளது என்றே சொல்லலாம். ஒரு பக்கம் பாரதி கண்ணம்மா, பிக் பாஸ் என விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் பல எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து வருகிறது. இது வரையிலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மூர்த்தி சில தினங்களாக வீட்டில் நடந்த பிரச்சனையால் குடித்து விட்டு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விறுவிறுப்பான கட்டங்கள் போய்க் கொண்டுள்ளது. இது வரையிலும் தனது குடும்பத்திற்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்த தனம் – மூர்த்தி தம்பதிகளை பலரும் குழந்தை இல்லாத காரணத்தால் இழிவாக பேசி வருகின்றனர்.
இந்த விஷயம் தனம் குடும்பத்திற்கு தெரிய வரவே மிகவும் கோவமடைகின்றனர். இது வரையிலும் உண்மைகளை வெளியில் சொல்லாமல் இருந்த தனத்தின் அம்மா கோவிலில் வைத்து அனைத்து உண்மைகளையும் மூர்த்தி குடும்பத்திடம் கூறி சண்டையிடுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
மூர்த்தியின் அம்மா பயங்கரமாக கோவமடைகிறார். யாரை கேட்டு இந்த மாதிரியான முடிவை எடுத்தீர்கள்?? என்று தனத்தை பக்கத்தில் கூட சேர்க்க மறுக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தனம் அழுது புலம்புகிறார். மேலும் ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் தன் அண்ணியின் தியாகத்தை நினைத்து அழுது புலம்புகின்றனர்.
தனம் எவ்வளவு சமாதானம் செய்தும் அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை. ஜீவா மீனாவிடம் வீடியோ காலில் நடந்த அனைத்தையும் கூறுகிறார். இதனால் மீனாவும் அதிர்ச்சியடைகிறார். ஜீவாவை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் மீனா. பிறகு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராமல் இருக்கும் சத்திய மூர்த்தியை நினைத்து பதட்டமடைகிறார் தனம்.
கதிர் அவரை தேடிப் போகவே குடித்து விட்டு தள்ளாடிய நிலையில் கிடக்கிறார் மூர்த்தி. இதனால் அதிர்ச்சியடையும் கதிர் அவரை கைத்தாங்கலாக அழைத்து செல்கிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது. இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும்போது வீட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க தனம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை எடுப்பார் என்று தெரிகிறது. அதனை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.