இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், எந்த ஒரு மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் ராணுவத்தை தயாராக வைத்திருக்கும் படி சீன அதிபர் ஷி ஜின்பிங் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளார்.
எல்லைப் பிரச்சனை:
லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறி ராணுவ படைகளை குவித்து வரும் சீனாவிற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் அதைவிட அதிகளவில் ராணுவ படைகளை குவித்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் சீன அதிபர் தனது ராணுவத்தினரை எந்தஒரு மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு கூறியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு வித்திட்ட சீனாவின் மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
ஆனால் கொரோனவை வென்று விட்டதாக கூறும் சீனா ராணுவத்திற்காக 179 பில்லியன் டாலர்களாக செலவினத்தை அதிகரித்து உள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகமாகும். இந்நிலையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், மோசமான சூழ்நிலைகளுக்கு தயாராக இருக்கும் படியும், போருக்குத் தயாராக இருக்கும் படியும் தனது ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
மேலும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களின் பாதுகாப்பில் உறுதியுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளார். இவர் எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டு இவ்வாறு கூறவில்லை என்றாலும் இது இந்தியா – சீனா இடையே போர் பதற்றத்தை அதிகரிப்பதாகவே உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் சீனாவைச் சேர்ந்தவர்களை திரும்ப வருமாறு அந்நாடு அழைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |