பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல், வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில் கள்ளழகர் திருவிழாவின் போது பக்தர்கள் நீரை பீய்ச்சி அடிப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்து இருந்தார்.
நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுத்துள்ளார்களா? பரபரப்பான குற்றச்சாட்டு பதிவு!!!
இந்நிலையில் கள்ளழகர் மீது நீரை பீய்ச்சி அடிப்பதற்கான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதில் “முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, கள்ளழகர் மீது நீரை பீய்ச்சி அடிக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.” என நீதிபதிகள் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.