பாஜக-வுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவு., இயந்திரங்களில் கோளாறு? பகீர் தகவல்!!!

0

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) முதல் ஏழு கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நாளை (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் கேரளா காசர்கோடு சட்டமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றதாக தகவல் வெளிவந்தது.

பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு., இவர்களுக்கெல்லாம் கிடையாது? வெளியான முக்கிய தகவல்!!!

அதில் பாஜக-வுக்கு வாக்களிக்கும் பட்டனை ஒரு முறை அழுத்தினால், 2 ஓட்டுகள் விழுந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற சின்னங்களை விட காங்கிரசின் கை சின்னம் சிறியதாக இருப்பதாகவும், இந்த கோளாறுகள் 4 இயந்திரங்களில் கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. மேலும் காசர்கோட்டில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. இந்த வதந்தியை தொடர்ந்து பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here