பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது கிக் 2, THE BULL போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அதன்படி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பைக்கில் வந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்கி குப்தா, சாகர் பால் ஆகியோரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.