தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவை தொகை, நடப்பு ஏப்ரல் மாதம் களஞ்சியம் இணையதளம் வாயிலாக வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
எலான் மஸ்கின் அடுத்த திட்டம்., அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே.., ஷாக்கில் பயனாளர்கள்!!
இந்த சூழலில் களஞ்சியம் இணையதளம் மூலமாக அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். பலரின் கணக்கில் நிலுவைத் தொகை வரவு வைக்கப்படாமலும், ஒரு சிலருக்கு இருமுறை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் மாதம் அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.