தமிழகத்தை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானாவில் மகாலட்சுமி இலவச பேருந்து பயண திட்டத்தை, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி அம்மாநில காங்கிரஸ் அரசு அமல்படுத்தியது. இதன்மூலம் மாநிலம் முழவுதும் உள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனுதினமும் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் 7ஆம் தேதி வரையில் பயணம் செய்தவர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி தினமும் சுமார் 6 லட்சம் பேர் என நான்கு மாதங்களில் ரூ.1,177 கோடியை, பொதுமக்கள் சேமித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இப்போது, சராசரியாக 29.67 லட்சம் பெண்கள் தினசரி இலவச பேருந்து பயணம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் அதிருப்தி., முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்ற ஷாக் ரிப்போர்ட்!!!