தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் நீண்ட காலமாக பழைய ஓய்வூதிய திட்டம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீர்க்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நிதி நிலை காரணம் காட்டி இதுவரையிலும் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருவதில், அரசு ஊழியர்கள் பலரும் திமுகவுக்கு எதிராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்கம் 2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், திமுகவினர் கடைசி கட்ட பிரச்சாரத்தை தீவிரமாக்க முடிவு செய்துள்ளனர். எனவே தேர்தலுக்கு பிறகு அரசு ஊழியர்களின் கோரிக்கை தீர்க்கப்படும் என கூறி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.