தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, நவீன முறையிலான கற்றலை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தம், அசைன்மென்ட் உள்ளிட்ட செயல்பாடுகளை ஆன்லைனில் பதிவு செய்யும் விதமாக அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் டேப்லெட் (Tablet) வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
IPL 2024: பார்ம் அவுட்டில் சுப்மன் கில்.. உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பாரா??
வரும் மக்களவை தேர்தல் பணிகள் முடிவடைந்த பிறகு, முதற்கட்டமாக 79,723 டேப்லெட்கள் வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.