இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் 10 அணிகளுக்கு இடையே சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற இருப்பதால் இத்தொடர் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில். இத்தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் 31(22), 8(5), 36(28), 89*(47), 19(21) ரன்கள் மட்டுமே அடித்து உள்ளார்.
இதன் காரணமாக உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இடம் பெறுவாரா என்ற கேள்வி வல்லுநர்களால் எழுப்ப படுகின்றன. ஆனாலும் கில்லுக்கு அனுபவம் இருப்பதால் அவர் உலக கோப்பையில் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.