தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜூ அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் வார விடுமுறை வர இருப்பதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளவர்களும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 10) 315 பேருந்துகளும், 12ஆம் தேதி 290 பேருந்துகளும், 13ஆம் தேதி 340 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு, வேளாங்கன்னி உள்ளிட்ட இடங்களுக்கு 3 தினங்களுக்கு தலா 40 பேருந்துகள் என 120 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
2024ஆம் ஆண்டின் டெட் தேர்வுக்கு தயாராகுறீங்களா? மாஸ் அப்டேட்., வாங்கி பயனடையுங்கள்!!!