டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை கைது மற்றும் காவலுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் நேற்று (ஏப்ரல் 9) பரிசீலித்தனர்.
அதில் “அமலாக்கத்துறை கைது செய்தது சட்டத்திற்கு புறம்பானது அல்ல.” எனக் கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.