IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதினர். இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 64 ரன்களும் , அப்துல் சமத் 25 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 180 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் 46 ரன்களும் மற்றும் அசுதோஷ் சர்மா 33 ரன்களும் விளாசினார். இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.