தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி, மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரைந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று முதல் 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை.., மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!
அதன்படி தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் தலைமை அலுவலகராக பணிபுரிபவர்களுக்கு ரூ.1,700, கடை நிலை ஊழியர்களுக்கு ரூ.600 என ஊதியம் வழங்க அனுமதி அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஊதியத்தை கணக்கிட்டு ரூ.58 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.