இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை கொண்ட மதசார்பற்ற நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இதனால், ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கடவுள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இவ்வாறு நடைபெறும் முக்கிய வழிபாடுகளுக்கு இந்திய அரசானது மக்களுக்கு பொது விடுமுறையும் அளித்து வருகிறது.
அந்த வகையில் இந்து பண்டிகையான ராம் நவோமிக்கு வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இந்த நாளில், மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.