இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி படைத்து இருக்கும் சாதனை குறித்து காணலாம்.
அதாவது ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் முதல் 3 பந்துகளில் 3 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை எம்.எஸ் தோனி பெற்றுள்ளார். 42 வயதான தோனி முட்டியில் காயத்தை வைத்து கொண்டே இந்த அளவிற்கு அதிரடியாக செயல்படுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.