தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இப்போதே சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, முன்கூட்டியே இறுதித் தேர்வுகளை முடிப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு, கடந்த 8ஆம் தேதியுடன் முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மாதம் கோடை விடுமுறை கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இதுவரையிலும், மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? என அறிவிக்கவில்லை. வெயிலின் தாக்கத்தை பொறுத்தே, அப்போது முடிவு செய்யப்படும்.