சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இதனால் 47,150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீனா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல தொழில்துறை நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளில் உற்பத்தியை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன. இதில் தமிழகத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ள ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இந்தியாவில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன.
அதன்படி இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்களுடன் ரூ.15,138 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் 47,150 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9 நிறுவனங்கள் நேரடியாகவும், 8 நிறுவனங்கள் காணொளி வாயிலாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |