எல்லை பிரச்சனையை உருவாக்கிய சீனா தற்போது இந்தியாவுடன் ஒத்துழைக்க காத்திருக்கிறோம் என்று கூறி அந்தர் பல்டி அடித்துள்ளது
எல்லை பிரச்னை:
கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்தியா சீன எல்லையான லடாக்கில் பிரச்சனையை உருவாக்கியது, சீனா. அமைதியாக இருந்த நமது வீரர்களை வம்பிழுத்து தேவையில்லாத மோதலை ஏற்படுத்தியது. இதனால், நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
சீன ராணுவத்தில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் மரணம் அடைந்தனர். இதோடு நில்லாமல் சீனா அடுத்தடுத்து பிரச்சனைகளையும் உருவாக்கி வந்தது. பேச்சுவார்த்தை நடத்தினாலும் அங்கு ஒரு வாக்கு கொடுத்துவிட்டு செயலில் வேறு விதமாக சீனா நடந்துகொண்டது. இதனால், இது பனிப்போராக இருந்து வருகிறது.
சுதந்திரதின உரை:
இப்படியாக இருக்க சுதந்திரத்தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்திய போது, பாக்கிஸ்தான் முதல் சீனா வரை உள்ள எல்லை எல்லா இடங்களிலும் இந்தியாவின் இறையாண்மையில் அவர்களுக்கு புரியும் வகையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று தனது உரையில் தெரிவித்திருந்தார். இதனை கவனித்த சீனா அரசு நமக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது.
சீன அந்தர் பல்டி:
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!!
இந்த செய்தினை சீன அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷோ லிஜியான் கூறியதாவது “இந்தியாவும் சீனாவும் அண்டை நாடான இந்தியாவும் ஆதரவாகவும் பரஸ்பர மரியாதையாகவும் இருக்க வேண்டும். சீனா இந்தியா அரசுடன் பணியாற்ற காத்திருக்கிறது. அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை களையவும் இது தான் சிறந்த வழி” என்று தெரிவித்துள்ளார்.