முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை!!

0

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

பிரணாப் முகர்ஜி:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு மூளையில் இருக்கும் உறைவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்ட காரணத்தால் வென்டிலேட்டர் ஆதரவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புக்கள் நிலையாக செயல்படுவதாக தெரிவித்து உள்ளனர். 84 வயதான முன்னாள் ஜனாதிபதி ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஒரு உறைவு அகற்றுவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாளில் இருந்து கோமா நிலையில் உள்ளார்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம் – சீனா பல்டி!!

ஸ்ரீ பிரணாப் முகர்ஜியின் மருத்துவ நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார், அவருடைய முக்கிய உடல் உறுப்புக்கள் நிலையானவை என்று மருத்துவமனையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here