வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

வெப்பச்சலனம் காரணமாக இன்று(மே 6) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். உள் கர்நாடக மற்றும் அதனை ஒட்டிய உள் தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக 07.05..2021 மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், கடலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்..

‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இறப்பு விகிதம் குறைவு தான்’ – மாவட்டம் மேயர் அறிவிப்பு!!

08.05.2021,09.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி மாவட்டங்கள் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 10.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இறப்பு விகிதம் குறைவு தான்’ – மாவட்டம் மேயர் அறிவிப்பு!!

11.05.2021 மற்றும் 12.05.2021 அன்று மேற்கு வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் தற்போது நிலவும் வெப்பநிலை அதிகபட்சமாக 1 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸாக இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உசிலம்பட்டி, ஆத்தூர், போடிநாயக்கனூர், திருபுவனம், பிளவக்கல் தலா 2, மண்டபம், பெருங்கலூர் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு கடலுக்குள் செல்ல எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here