தமிழகத்தில் இன்று காலை 4 மணி முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது அனைத்து கடைகளும் 12 மணிக்கு மூடப்பட்டுள்ளது
கடைகள் அடைப்பு:
தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 20ம் தேதி அன்று கொரோனா பரவலை குறைக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற பல தடுப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தது. மேலும் இரவு நேரத்தில் பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இருந்தும் தமிழகத்தின் கொரோனா தொற்றின் வேகம் குறையவில்லை. கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் நேற்று முன்தினம் தமிழகத்தில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று(மே 6) காலை 4 மணி முதல் வருகிற மே மாதம் 20ம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிய கட்டுப்பாடுகளில் மளிகை, காய்கறி கடைகள் அனைத்தும் 12 மணி வரை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மே 8 முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு – முதல்வர் அதிரடி!!
மேலும் ஹோட்டலில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி என்றும் மற்றும் மற்ற கடைகள் அனைத்தும் திறக்க தடை என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் தமிழகத்தில் அனைத்து கடைகளும்(மருந்தகம்,ஹோட்டல் தவிர்த்து) 12 மணிக்கு மூடப்பட்டுள்ளது. ஹோட்டல் கடைகளில் காலை, மாலை, இரவு நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.