ரேஷன் கடைகளில் முதல்வர் படம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

0

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா நோய்பரவல் எதிரொலியாக மக்கள் பயனடையும் வகையில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

உயர்நீதிமன்றம்:

தமிழகத்தில் சுமார் 3 மாத காலமாக கொரோனா வைரஸ் என்னும் உயிர்கொல்லி நோய் மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதன் காரணமாக மக்கள் நலன் கருதி கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்றும் இதனை இரண்டு தவணையாக பிரித்து வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி முதல் தவணையாக ரூ.2000 அனைவருக்கும் வழங்கப்பட்ட நிலையில் இரண்டாவது தவணையாக ரூ.2000 ஜூன் 3ம் தேதி முன்னர் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் கொரோனா நிவாரணமாக 15 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் ரேஷன் கடைகளில் முதல்வர் படம் இடம்பெற்றிருப்பது குறித்த சர்ச்சை கிளம்ப தொடங்கியது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழக்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி - முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

கொரோனா தொற்றில் இருந்து மீள வேண்டுமா??ரசிகர்களுக்கு சூப்பர் அட்வைஸ் கொடுத்த நடிகை !!

தற்போது இதனை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து அதிரடியான அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா நிவாரணம் வழங்கும் ரேஷன் கடைகளில் முதல்வர் படம் இடம்பெறலாம் என்றும் அது தவறில்லை என்றும் ஆட்சியமைத்த கட்சியின் சின்னம் இடம்பெறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் உதவிபுரியும் பொழுது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது சென்னை நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here