தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் தற்போது நடிகை சரண்யா தனது ரசிகர்களுக்கு சூப்பர் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
சரண்யா:
தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது குறித்து நடிகை சரண்யா தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் சூப்பர் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி கொரோனாவில் இருந்து தப்பிக்க நாம் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நானும் தடுப்பூசியை போட்டுள்ளேன். அதுமட்டுல்லாமல் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். சிலர் வாய்க்கு கீழ் மாஸ்க்கை அணிகின்றனர். அது முறையல்ல. மேலும் துணி மாஸ்க் அணிவது பலனில்லை என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர். எனவே மருத்துவர்கள் அணியும் மாஸ்க்கை அனைவரும் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் இரண்டு மாஸ்க் அணிந்தால் மேலும் நல்லது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தங்களது வீட்டிற்கு உறவினர் யாரும் நம்மை பார்க்க வந்தால் நீங்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
பாரதி கண்ணம்மா வெண்பாவின் ஜொலிஜொலிக்கும் அவதாரம் – வாயடைத்து போன ரசிகர்கள்!!
மேலும் உங்கள் உறவினரையும் மாஸ்க் அணிய அறிவுறுத்துங்கள் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் சுமார் 2 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை 4 பேர் மட்டும் பின்பற்றினால் போதாது நம் அனைவரும் ஒண்றிணைந்து பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றி அரசிற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.