டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நிலவும் பாய்ஸ் லாக்கர் ரூம் குறித்து வெளிப்படையாக தகவல்கள் அம்பலமானதை தொடர்ந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பள்ளி மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாய்ஸ் லாக்கர் ரூம்:
புதுடெல்லியில் வசதி மிக்கவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த குற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ என்று ஒரு குழுவை உருவாக்கி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் தங்கள் உடன் படிக்கும் பெண்கள் மற்றும் சிறு வயது பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து அதற்கு மதிப்பெண் வழங்கி வந்துள்ள சம்பவம் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாணவர்கள் தங்களுக்குள் வைத்திருந்த ஸ்கிரீன் ஷாட்களை பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் டெல்லி போலீசார் 15 வயது பள்ளி மாணவனை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பல மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஒரு மாணவன் தான் புகைப்படம், மெசேஜ்களை பலருக்கும் பகிர்ந்து சாட்டிங் செய்ததாக கூறப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |