சீனாவின் ஹுவான் நகரில் தொடங்கி உலகில் 200 நாடுகளுக்கும் மேல் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா, சீனா போன்ற மிகப்பெரிய வல்லரசு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் மடகாஸ்கர் நாட்டில் கொரோனவை குணப்படுத்தும் மூலிகை மருந்து உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனாவிற்கு மூலிகை மருந்து:
மடகாஸ்கர் நாட்டில் மூலிகை மருந்து மூலம் கொரோனவை கட்டுப்படுத்தி விட்டதாக அந்நாட்டின் அதிபர் ஆன்ட்ரி ரஜோலினா தெரிவித்து உள்ளார். தீவு நாடான அங்குள்ள ஆர்டிமீஸியா என்ற தாவரத்தில் இருந்து மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. தற்போது இதே மருந்து கொரோனா வைரஸையும் அளிக்க வல்லது என அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். இந்த புதிய மருந்திற்கு ‘கோவிட் ஆர்கானிக்ஸ்’ என பெயரிட்டு உள்ளனர்.
உயிரிழப்பு இல்லை:
மடகாஸ்கரில் உள்ள மலகாசி மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த மருந்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்து செய்தியாளர்கள் முன்னிலையில் அதனை அருந்தியும் ஆன்ட்ரி ரஜோலினா காட்டினார். அங்கு இதுவரை 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நாடு தான் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்க போகிறது என கூறப்பட்டு வரும் நிலையில் மடகாஸ்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |