கடந்த 2010ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’.இப்படத்தில் இடம்பெற்ற சந்தானம் – ஆர்யாவின் நகைச்சுவை காட்சிகள் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு அவர்கள் காம்போ ரசிக்கும் விதமாக இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது 13 வருடங்களுக்கு பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறதாம்.தற்போது கதைக்களம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சந்தானம் பேசியது குறிப்பிடத்தக்கது.