விஜய் டிவியின் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வீர தமிழச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்து, மோசமான விமர்சனங்களுடன் வெளியே வந்தார்.
இருப்பினும் இவருக்கு பல பேர் சப்போர்ட் செய்தாலும், சில பேர் பிக்பாஸ் பெயரை சொல்லி இவரை அவமானம் படுத்தி வருகின்றனர். இருந்தாலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது கெரியரில் போகஸ் செய்து ஒரு சிங்க பெண்ணாகவே இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சைடு ரோலில் நடித்து வந்த அவர் தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் ஜூலி கழுத்தில் மாலை அணிந்து பிரபல நடிகருடன் நிற்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். ஆனால் இது சீரியலுக்காக இருக்கலாம் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சீரியலாக இருப்பின் அவர்கள் இருவரும் ஏன் கழுத்தில் மாலையுடன் இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். அப்படி இந்த தொடரில் என்னதான் நடக்கிறது என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.