பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை கடந்த ஆண்டு எலான் மஸ்க் வாங்கினார். பொருளாதார மந்தநிலையால் சரிவை சந்தித்து வந்த ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார். அந்த வகையில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான புளூ டிக்குக்கு, மாதாந்திர சந்தா செலுத்த வேண்டும் என அண்மையில் அறிவிப்பை வெளியிட்டனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதைத்தொடர்ந்து புளு டிக் கணக்குக்கு பல்வேறு வசதிகளையும் ட்விட்டர் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தலைமை செயல் அதிகாரி (C.E.O.) பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புதிய செயல் அதிகாரி ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதாகவும், இன்னும் 6 வாரங்களில் பதவி ஏற்பார் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களே.., இன்று முதல் பள்ளிகளில் மார்க் ஷீட் விநியோகம்!!
இதன்பின் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும், நிர்வாக தலைவராகவும் தொடர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.