விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது வார இறுதியை தொட்டுள்ளது. சனிக்கிழமை வந்தாலே இந்த வாரத்தில் யார் வெளியேறுவார்கள் என்ற கணிப்பு தான் சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல சண்டைகளுடன் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது தான் ஆரம்பித்தது போல இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாளை தொட்டுள்ளது. இந்நிலையில் 70 நாளிலும் 12 போட்டியாளர்கள் உள்ளன. இது வரையிலும் எந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இப்படி இருந்தது கிடையாது.
மேலும் வைல்ட் கார்டு என்ட்ரியாகவே 2 பேர் உள்ளே வந்தனர். தற்போது டபுள் எவிக்ஷன் இருப்பதாக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் ரம்யா பாண்டியன், சோம், கேபி, ஷிவானி, நிஷா, ரமேஷ் போன்றோர் நாமினேஷனில் உள்ளனர். இதில் யார் வெளியேற போகிறார்கள் என்ற கருத்துக்கள் வலைத்தளங்களில் பரவி வருகிறது.
‘இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்’
அதாவது நிஷா வெளியேற வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர். ஆரம்பத்தில் நிஷாவிற்கு இருந்து வந்த ஆதரவுகள் இப்பொழுது வெகுவாக குறைந்துள்ளது. அதுவும் அர்ச்சனா பின்னாடியே சுற்றி திரிவது பார்க்க கடுப்பாகவும் உள்ளது. இந்நிலையில் அர்ச்சனா வாராவாரம் தப்பித்துக்கொண்டும் வருகிறார். அர்ச்சனாவுக்கு அப்படி யார் தான் ஓட்டு போடுகிறார்கள் என்பது தான் தெரியவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தற்போது நிஷா மீது பலரும் கடுப்பில் உள்ளனர் என்றே சொல்லலாம். அதிலும் டபுள் எவிக்ஷன் என்று இருந்தால் கண்டிப்பாக நிஷா மற்றும் ரமேஷ் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால் விஜய் டிவி இவர்களை வழக்கம் போல காப்பாற்றினால் கேபி வெளியேறவும் வாய்ப்புள்ளது.