அனிதா சம்பத்தை அழ வைத்த சுரேஷ் – ஷாக்கான பிக்பாஸ் ரசிகர்கள்!!

0
bigg boss 4
bigg boss 4

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். முதல் இரண்டு நாட்களிலேயே அமர்க்களமாக ஆரம்பித்துள்ளது. இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக அனிதாவிற்கும், சுரேஷிற்கும் சண்டை நீடித்து வருகிறது.

பிக் பாஸ் சீசன் 4

மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன் 4 சென்ற ஞாயிற்றுநிகழ்ச்சியில் கிழமை தொடங்கப்பட்டது. மக்களுக்கு மிகவும் பரீட்சயமான போட்டியாளர்களே இதில் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சி பொங்க காட்டப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் முதல் நாளிலேயே சண்டையை ஆரம்பித்து விட்டனர்.

bigg boss 4
bigg boss 4

முதலில் ஷிவானியை டார்கெட் செய்து வந்தனர் ஹவுஸ் மேட்ஸ். இதனால் ஷிவானிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இப்பொழுது அனிதா சம்பத்துக்கும், சுரேஷ் அவர்களுக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அனிதா தான் அவரை கலாய்த்து முதலில் பேசியது.

bigg boss season 4
bigg boss season 4

அதற்கு பதில் சொல்லும் விதமாக சுரேஷ் பேசினார். ஆனால் அனிதா அதனை தற்போது பெரிய விஷயமாக கூறி சண்டையிட்டார். பிறகு இருவரும் சமாதானமும் ஆகினர். தற்போது மீண்டும் ஒரு சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அனிதா. இது வரை அனிதாவிற்கு சப்போர்ட் செய்து வந்த அனைவரும் சுரேஷ் அவர்களுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

bigg boss season 4
bigg boss season 4

அனிதா இத்தனை நாள் தான் சம்பாதித்து வைத்த பெயரை கெடுக்க பார்க்கிறார் என்று கூறி அழுகிறார். மேலும் தான் கஷ்டப்பட்டு முன்னேறிய கதையையும் இன்றைய எபிசோடில் கூறுகிறார். இந்த ப்ரோமோவில் பலரும் அனிதாவை திட்டி கமன்ட் செய்துள்ளனர்.

bigg boss season 4
bigg boss season 4

ஆரம்பத்தில் சுரேஷ் அவர்களுக்கு எதிராக இருந்த மக்கள் தற்போது அவருக்கு ஆதரவு காட்டி வருகின்றனர். மேலும் அனிதா தலைக்கனமாக இருப்பதாகவும் கமன்டில் கூறுகின்றனர். போகிறபோக்கை பார்த்தால் அனிதா நீண்ட நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடிக்க முடியாது என்று தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here