ஷிவானியோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் – கதறும் பாலாஜி!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 80 வது நாளை கடந்த நிலையில் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து வர ஆரம்பித்துள்ளனர். இன்றைய எபிசோடில் ஷிவானி அம்மா மற்றும் பாலாஜியின் நபரும் வருகிறார்.

பிக் பாஸ்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அர்ச்சனாவும் அனிதாவும் சேர்த்து மக்களை குழப்பிவிட்டனர் என்றே சொல்லலாம். ஏனெனில் அர்ச்சனா இருந்த வரைக்கும் சோம் ஆரி தனது விளையாட்டையே மறந்து விட்டனர். அனிதா அனைவரையும் எதாவது ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

இதனால் மக்களுக்கு எரிச்சல் தான் ஏற்பட்டது. மேலும் மக்கள் மத்தியில் அனிதாவிற்கு இருந்த பெயரையும் கெடுத்துக்கொண்டார். போன வாரம் அவர் வெளியேறுவார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. அனைவரும் அவர் அவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அடுத்ததாக ரம்யாவும் ஆரி மீது அடுத்தடுத்த குற்றசாட்டுகளை வைக்க மக்கள் தற்போது ரம்யா மீதும் கோவமாக உள்ளனர். இன்றைக்கு ப்ரோமோவில் ஷிவானி வீட்டில் இருந்து அவரது அம்மா வர ஒரு பாச போராட்டமாகவே காட்சியளித்தது பிக் பாஸ் வீடு. நீண்ட நாட்களுக்கு பிறகு ஷிவானி அம்மாவை பார்த்ததால் கண்கலங்குகிறார்.

மேலும் ஷிவானியின் அம்மா தனியாக அழைத்து சென்று ஏன் இந்த வீட்டில் உன் கருத்தை எடுத்து வைக்கவே இல்லை. அதுக்கு நீ வீட்டிலேயே இருந்திருக்கலாமே என்று திட்டுகிறார். அடுத்த ப்ரோமோவில் ஷிவானி அம்மா திட்டியதை நினைத்து பாலாஜி அழுகிறார். என்னால தான் ஷிவானி திட்டு வாங்குனா என்று ரம்யாவிடம் புலம்புகிறார்.

 

அடுத்ததாக மூன்றாவது ப்ரோமோவில் பாலாஜியின் நண்பன் வர இடமே கலகலப்பாகிறது. கடைசியாக போகும்போது பாலாஜியிடம் நீ சொல்ற பாயிண்ட் எல்லாமே சரி தான்.

இப்படியே தொடர்ந்து விளையாடு என்று சொல்லிவிட்டு செல்கிறார். இந்த ப்ரோமோக்களை வைத்து பார்க்கும்போது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைய சுவாரசியமான சம்பவங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here